Chellamaeeee Naa Eppo itha padichu mudikaa Daa
என் வரிகள் காண வருவாயா!!
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...
விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!
என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!
இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
விழிதிறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்...
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது...
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்.....
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....
விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!
அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!
பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்
உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்...
வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்...
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!
உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க
என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது
உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
சொந்தமென்று
என்னுள்
நீ வந்த பின்னே
இனி நான் தனிமையில்
தவிர்த்து இருக்க
அவசியமில்லை
காதல் ஒரு உணர்வு
பூர்வமானது
அதை தன் துணையிடம்
இருந்து ஆத்மார்த்தமாக
பெற வேண்டும்
அச்சத்தையும்
மிச்சம் வைக்காமல்
உச்சம் தொட்ட
உன்னிடம் கேட்பது
இந்த முத்தம் மட்டுமே
அதுவும்
நித்தம் வேண்டுமே
அவன் தரும் பரிசுகளில்
என்றும் நான் விரும்புவது
காதலுடன் அவன்
வைத்து விடும்
ஒரு முழப் பூவே
கடந்து செல்கிறது
நீள் இரவு
அவள் நினைவுகளின்
துணையாலும்
இதமளிக்கும் இசையாலும்
நீ விட்டு சென்ற ப்ரியம்
இந்த ஜென்மத்திற்க்கு
போதுமானதாய் இருக்கிறது
நீ கொடுக்கும்
எதிர்பார்ப்புகளும்
எனக்கு போதைதான்
உனக்காக காத்திருக்கயில்
நிஜமோ நிழலோ
நித்தம் கலைத்துசெல்கிரால்
என் உறக்கத்தை
நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ
துளித் துளியாய்
உன் புன்னகை
துளிர்க்கின்றதே
ஒரு நேசம்
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
தொடர் கதையில்
தொலைந்த தென்றல் நீ
உன் முகம் தேடியே
மௌனத்தில் பூத்த
மலரானேன்
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
என் இதயத்திற்கு
இறகுகளைப் படைத்து
உன்னைச் சுற்றியே
ஒவ்வொரு நொடியும்
என்னை பறக்கச் செய்கிறாயே
ஆழம் விழுதை போல்
வேர் பிடித்து
பனை மரம் போல்
பெருக வேண்டும்
நம் காதல்
எண்ணற்ற நட்சத்திரங்களை
கூட எண்ணி
முடித்து விடலாம்
மிகவும் எளிதாக எனினும்
உன் பார்வை என்னவென்று
எண்ண முடியாது
தவிக்கிறேன் நான்
உன் புன்னகையின்
ஒவ்வொரு கோணமும்
என் மனதை சிக்க வைக்கும்
காதல் வாசம்
உன்னோடு பேசாத
நொடி கூட
என் இதயம் ஓயாத
ஓசை போல இருக்கிறது
நீயிருக்கும்
இடம் மட்டும்
எனக்காகவே ஆன
ஒரு சிறிய சொர்க்கம்
மலர்களின்
மணம் போல்
உன் மனம் எனக்கு
இனிமையாக விளங்குகிறது
உன் அருகில்
இருக்கும் போது
என் உயிரின்
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன்
இணைந்திருப்பது போல
உணர்கிறேன்
மார்கழி மாலை மஞ்சள்
வெளிச்சத்தில்
உன் குரல் மெல்லிசை
போல் ஒலிக்கிறது
என் வாழ்க்கையின்
ஒவ்வொரு பகுதியிலும்
உன் நினைவுகளே
எனது காதல்
சிந்தனைகளின் வழிகாட்டி
நினைவுகள்
தோழமையாக நீந்தும்
உன் அன்பு
ஓயாத நதியாக
என்னை நனைக்கிறது
உன் அரவணைப்பில்
அடையும் அமைதி
என் வாழ்வின்
சிறந்த இசையாக மாறுகிறது
உன் நினைவுகள்
என் வாழ்க்கையின்
ஆறாக ஓடுகிறது
அதில்தான்
நான் தினமும்
மூழ்கி வாழ்கிறேன்
உன் காதலில்
நான் காணும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தின்
இசை அதிகரிக்கிறது
காதல் என்பது
இரு இதயங்களின் இசை
ஒவ்வொரு துடிப்பிலும்
அந்த இசை மேலும்
அழகாக மாறுகிறது
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
உன்னுடன் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தின் இசை
மழை போல நீ வந்தாய்
உன் நினைவுகள் நனைத்தும்
என் இதயம்
சுத்தமாய் மலர்கிறது
உன் சிரிப்பில்
அடங்கியிருக்கும் மழைத்துளிகள்
என் மனதின்
வறண்ட மண்ணை
சாகராக மாற்றுகிறத
அழகான தொகுப்பு நீ இல்லா பொழுது உன் நினைவும் ரசனை ஆகின்றது
இரு இதயங்கள் நனைகிறது காதல் என்ற ஒற்றை மழையில்...!
அதிக கோபம் கொண்டது உன்னிடம் மட்டும் தான் அதைவிட அதிக பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டும் தான்
தூணாக நீ இருக்க நினைத்தால் உனக்கு துணைவியாக வர தயக்கம் எனக்கு எதற்கு என்னவனே ஏற்றுக்கொண்டு ஏற்றி விடு நம் காதல் தீபத்தை நம் மணமாளிகையில்....
அதிக கோபம் கொண்டது என்னிடம் மட்டும் தான் அதைவிட அதிக பாசம் கொண்டதும் உன் மீது
சாலையோர நடை பயிற்சியில் காலை நேர தென்றலாய் நீ,
சலிக்காத இன்பம் தூரத்து நிலவும் அருகில் நீயும் ,
விடைபெறும் போதெல்லாம் பரிசாக்கிச் செல்கின்றாய் அழகிய தருணங்களை ,
எனக்குப் பிடித்ததை எல்லாம் நீ ரசிப்பதால் உனக்குப் பிடிக்காததை எல்லாம் நான் தவிர்க்கிறேன் ,
என் மனதை காயப்படுத்திய உன் வார்த்தைகளோடு தினம் பயனித்துக்கொண்டு இருக்கிறேன் ஒரு வார்த்தையாவது என் மனதிலுள்ள காயத்தை அற்றாத என்று
கவிதை எழுத சிந்தித்தால் என் சின்தனைக்குள் நீ மட்டும் தான் கவிதையாக வருகிறாய்.....
ᴱⁿᵈʳᵘᵐ ᵘⁿⁿᵃⁱ ᵐᵃʳᵃᵛᵃᵃ!!
❤ᴼᵒᵈʰᵃ_ⁱᵈʰᵃʸᵃᵐ ❤
View attachment 285254