• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ennul aval

மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
 
என் தேவதை
நீ வருவாய் என காத்து நிற்கிறேன்
கடற்கரை மணலில்
நான் பூத்து நிற்கிறேன்

சித்திரை வெயிலும் ...
என்னை சுட்டெரிக்குதே
பொன்திரை போர்த்தியே
என் உடல் கருக்குதே

சிந்தனை செய்ய
இது நேரம் அல்லடி
வந்தெனை கொஞ்சம்
நீ அனைத்துக்கொள்ளடி

சொல்லாத சோகம் எல்லாம்
மறைந்து போகுமே - நீ
இல்லாத நாட்கள் எல்லாம்
கரைந்து போகுமே

இரண்டான இதயம்
இங்கே ஒன்று சேருமே
தமிழில் பிரிவு என்ற
சொல்லிற்கும்தான் அர்த்தம் புரியுமே
 
சாட்சிகள் இல்லை
விசாரணை இல்லை
விழிதனில் விலங்கிட்டு
ஆயுள் கைதியாய்
இதய சிறையில் .



-Ungal naan
 
சாட்சிகள் இல்லை
விசாரணை இல்லை
விழிதனில் விலங்கிட்டு
ஆயுள் கைதியாய்
இதய சிறையில் .



-Ungal naan
Enga erunthu man ithu Elam pudikara bayangarama eruje
 
என் கனவிலே நான் வரைந்த ஓவியம் அவள்
என் இதயத்தில் நான் செதுக்கிய சிற்பம் அவள்
என் உள்ளங்கையில் நான் கிறுக்கிய ரேகை அவள்
என் நாசியில் நான் நுகர்ந்த சுவாசம் அவள்
என் கண்களில் நான் பதித்த கருவிழி அவள்
இவைகளை விட்டு நான் பிரிந்து விட முடியும் என்றால்
உன்னை விட்டும் பிரிந்து விட முடியும்
ஏன் என் கண்களில் தூசியாய் விழுந்து என்னை கண் கலங்க வைக்கிறாய்
கலங்கினாலும் கரைந்து விட மாட்டேன்
நீ என் இதயத்தை சிதைக்கலாம் ஆனால் என் இதயத்தில் சிற்பமாய் இருக்கும் உன்னை சிதைக்க முடியாது
வாடி விடும் என்று தெரிந்தும் பூவை தலையில் வைத்து அழகு பார்ப்பவள் நீ
நீ பிரிந்து செல்வாய் என்று அறிந்தும் உன்னை என் இதயத்தில் சுமந்து அழுது கொள்பவன் நான்.
நான் நானாக இருக்கும் வரை தான் என் இதயத்தில் நீ நீயாக இருப்பாய்
என்னை மாற்றிவிடாதே
என்னுள் இருக்கும் உன்னை இழந்துவிடாதே
Super bha
 
மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
அழகின் பிறப்பிடம் அவள்
இன்பத்தின் இருப்பிடம் அவள்
சொற்களின் தேன் குடம் அவள்
என் சிந்தனையில்
பனிக்குடம் அவள்
மொத்தத்தில்
காதலின்
பள்ளிக்கூடம் அவள்

என்னவள்
என்றும் நீ இனியவள்
 
உன் பாதையில் வேகத்தடைகள் இருக்கலாம்.

ஆனால் உன் லட்சியத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் சிறிதும்

மனத்தடை இருக்கக் கூடாது...
உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல்,

வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம்.

முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே இருக்கும்.
தோல்வி அடைந்தவனுக்கு தான் வெற்றியின் அருமை தெரியும்.

எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு வெற்றிக்காக போராடு.
கடிகார முள் போல வாழ்வது வாழ்க்கை அல்ல
காலத்திற்கு ஏற்றார் போல் வாழ்வது தான் வாழ்க்கை.
வந்ததை எண்ணி வருந்தாதே

வரப்போவதை எண்ணி கலங்காதே

போனதை எண்ணி புலம்பாதே

இதுதான் வாழ்க்கை

இதை என்றும் நீ மறவாதே.....
 
கடைக்கண் பார்வை!
விழி அம்புகள்
இதயத்தை துளைக்குது....
ஓரப் புன்னகை
உவகையில் நனைக்குது..

இமை அரும்புகள்
தூரிகை தேடுது...
புருவத்தின் வளைவுகள்
வானவில் காட்டுது...

பூ விழியோ...
மை விழியோ...
கயல் விழியோ...
மான் விழியோ...

எழுதாத கவிகளெல்லாம்
எழுதத்தான் துடிக்கின்றார்...
எண்ணத்தில் இவள் பார்வை
வண்ணத்தில் குழைகின்றார்....

விழிகளின் வலைக்குள்ளே
என் இதயம் வீழ்ந்ததடி....
மொழிகளின் வகையெல்லாம்
மௌனமாய் ஆனதடி...
 

என்‌ காதலி

❤️

கட்டி அணைப்பதற்கு
அருகினில் இல்லை
தொட்டுவிடும் தூரமும் இல்லை
கற்பனையிலும் உன்னை காணவில்லை
இதயமும் கூட‌ இயங்கவில்லை
என்‌ நிலையும் உனக்கு
ஏனோ புரியவில்லை !!
 
Kaadhalikaga paper nirapum nee
Petror kaga yeppo nirapuvai?
 

ஓர்‌ ஆணோ !!
ஓர் பெண்ணோ !!
அவர்கள் பெற்றோர்கள்
ஆகும் போது தான்
அவர்களை
பெற்றவர்களை பற்றி
அதிகம் சிந்திப்பார்கள் !!
 
Top