• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ennul aval

guitar

Newbie
என் கனவிலே நான் வரைந்த ஓவியம் அவள்
என் இதயத்தில் நான் செதுக்கிய சிற்பம் அவள்
என் உள்ளங்கையில் நான் கிறுக்கிய ரேகை அவள்
என் நாசியில் நான் நுகர்ந்த சுவாசம் அவள்
என் கண்களில் நான் பதித்த கருவிழி அவள்
இவைகளை விட்டு நான் பிரிந்து விட முடியும் என்றால்
உன்னை விட்டும் பிரிந்து விட முடியும்
ஏன் என் கண்களில் தூசியாய் விழுந்து என்னை கண் கலங்க வைக்கிறாய்
கலங்கினாலும் கரைந்து விட மாட்டேன்
நீ என் இதயத்தை சிதைக்கலாம் ஆனால் என் இதயத்தில் சிற்பமாய் இருக்கும் உன்னை சிதைக்க முடியாது
வாடி விடும் என்று தெரிந்தும் பூவை தலையில் வைத்து அழகு பார்ப்பவள் நீ
நீ பிரிந்து செல்வாய் என்று அறிந்தும் உன்னை என் இதயத்தில் சுமந்து அழுது கொள்பவன் நான்.
நான் நானாக இருக்கும் வரை தான் என் இதயத்தில் நீ நீயாக இருப்பாய்
என்னை மாற்றிவிடாதே
என்னுள் இருக்கும் உன்னை இழந்துவிடாதே
 
எனக்கான அடையாளம் தந்தவளும் அவளே அதையே இன்று தேட வைத்தவளும் அவளே.


யாராலும் கொடுக்கமுடியாது அன்புதான் உன் காதல் அதனால்தான் என்னால் மறக்க முடியவில்லை.

மனம் விட்டு பேச எத்தனையோ இருக்கு ஆனா கேட்க தான் நீ அருகில் இல்லையே.

யார் இருந்தாலும் இல்லாத உன்னை தான் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறது மனசு.

என் ஏமாற்றத்திற்கு நீ காரணம் இல்லை நான் உன் மீது வைத்த அதித எதிர்பார்ப்பே காரணம்.

போய் வருகிறேன் என ஒரு பொய்யாவது சொல்லி விட்டு போ உன்னை எதிர்பார்த்தே என் காலத்தை கழித்து கொள்கிறேன்.

மனதில் ஓரத்தில் உடைந்த படகாய் கரை ஒதுங்கியது நீ உடைந்து போன காதல் மிதவை.

காதலில் உளறும் எல்லா வார்த்தைகளும் அழகுதான் ஆனால் ஏனோ ஒரு சில வார்த்தைகள் காதலை அணு அணுவாய் கொள்கிறது.

நிஜத்தில் வேணாம் நீ கலைந்து போய் இருக்கலாம், ஆனால் என் கனவில் நீ ஒருபோதும் கலைய மாட்டாய்.

ஒளிந்து வைக்க தெரிந்த என் மனசுக்கு இன்னும் உன்னை மறக்க தெரியவில்லை.

எண்ணம் போல் வாழ்க்கை அமையவில்லை என்றாலும் என் எண்ணத்தில் என்றும் வண்ணம் நீ தான்.

நீ இன்று வாழ முடியாது என்ற நிலைக்கு அழைத்துச் சென்ற பின் தான் தட்டி விட்டு செல்கிறது இந்த காதல்.

நீ விரும்பி நான் விரும்பாதது நமக்குள் ஒன்றே ஒன்று தான் அது நம் பிரிவு.

வாழும் காலத்தில் வாழமுடியாமல் வாழ்ந்த காலத்தை தேடி திரிகிறேன் உன் நினைவுகளை சுமந்தபடி.

போகும்போதே நீயே என்னைக் கொன்று போயிருக்கலாம் உன் நினைவுகள் இப்பொழுது என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொள்வதைக் காட்டிலும்.

அரும்பாகி மொட்டாகி பூவாகி உதிர்ந்து சருகாய் போவதில் காதலும் மலரும் ஒன்றுதான்.

நினைத்ததை விட அதிகமாக உணர வைத்து விட்டாய் உன் பிரிவால் காதலை.

உன் நினைவுகள் என்றும் அணையா விளக்காய் இருக்கும் என் உயிர் உனக்காக.

நிஜமாக அருகில் இருந்தாலும் மனதளவில் ரொம்பவும் விலகி சென்று விட்டாய் காதலே.

இந்த ஏமாற்றத்திற்கும் வலிக்கும் காரணம் நான் அன்று உனக்காக என்னை மாற்றிக் கொண்டது.

என் காதல் இணையாது என்று தெரிந்தும் சேர்த்து வைத்து கொள்கிறது இந்த கனவும் கற்பனையும்.

எளிதாக நீ என்னை விட்டு மறைந்து கொண்டாய் அப்படியே என்னிடம் சொல்லிவிட்டு போய் இருக்கலாமே.

எரிந்தாலும் சேர்ந்து எரியும் நெருப்பாய் உன் ஞாபகங்கள் என்னோடு.

பலவித மாற்றங்களில் என்றுமே மாறாத மாற்றமாய் இருக்கிறது உன் நினைவுகள் மட்டுமே.

தொடமுடியாத தூரத்தில் இருந்தாலும் என்னை கட்டி அணைத்துக் கொள்கிறது உன் உணர்வுகள்.

நீ தயக்கமின்றி தந்த முத்தம் எல்லாம் இப்பொழுது தயக்கத்துடன் என் விழி முன் வந்து வந்து போகிறது.

மகிழ்ச்சியான தருணங்களில் எது என் உண்மையான மகிழ்ச்சி என்று புரிய வந்தது உன் பிரிவுக்கு பின்னால்.

மகிழ்ச்சியான தருணங்களில் அதை பகிர்ந்து கொள்ள நீ இன்றி மகிழ்ச்சியை உணர முடியாமல் தவிக்கிறேன்.

பெரியதாய் காரணம் ஒன்றும் இல்லை உன் பிரிவு ஒன்றை தவிர என் வலிகளுக்கு.

உண்மைக்கும் உண்மைக்கும் இடையில் இதுவரை எந்தவித குறையும் இன்றி உன் நினைவுகள் துணையோடு அமைதியாய் என் தேடல்.

உன் நினைவுகளால் மட்டும் வாழும் நான் உன்னை எப்படி மறவேன்.

சுமக்க முடியாத சுமைகள் எல்லாம் ஒன்றும் இல்லை உன் நினைவுகளுக்கு முன்னாள்.

கனவிலும் நினைவிலும் நாம் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதால் தான் நிஜத்தில் தனித்து இருக்கின்றோம்.

என் கண்ணுக்குள் கண்ணீர் இல்லை உன் உதட்டுக்கும் உருவம் இல்லை நீ சொன்ன ஒரு சொல்லால் எல்லாம் சிதைந்து போனது அதன் உருவம் மாறி.

தினம் தினம் உன் தேடல்கள் வந்து வந்து போகும், உன் நினைவுகள் எல்லாம் என்னை வாட்டி வதைக்கின்றது நான் உன்னை ஆழமாக நேசித்ததால்.

சின்ன சின்ன ஆசைகள் ஆல் உன்னை சித்திரமாய் வரைந்து வைத்திருந்தேன் என் இதய கூட்டுக்குள் நீ என்னை விட்டு பிரிந்ததால் இறகு இன்றி ஓவியம் பறக்க முடியாமல் தவிக்கின்றது.

செல் அரிக்கும் கல்லறை போல என் உள்ளுக்குள் அரிகின்றாய் இன்னும் சில நாட்களில் என் உடல் காணாமல் சென்று விடும்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றுவிட்டது கானல் நீருக்குள் உன் காதலை தேடிக்கொண்டே இருக்கின்றேன் இனியும் தேடுவது தொடராது உயிரே என்னை நானே தொலைத்து விட்டு தேடுவது போல உள்ளது.

என்னை உருகி உருகி நேசித்த ஒரு நிழல் எனை மறக்க பார்க்கிறது அதன் நிழலுக்குள் மறைந்து போக எனக்கும் சம்மதமே.

நிலையான நினைவும் இல்லை சுகமான கனவும் இல்லை எதுவும் இப்போது என் நினைவில் இல்லை எல்லாம் உன் பிரிவால் வந்த காதல் வலி தான்.

வானத்தைத் தொட்டு தொட்டு பார்க்கின்றேன் உன் உருவம் வந்து செல்லுமோ என்று எந்த உருவமும் வரவில்லை உன் கைகள் மட்டும் தேடிக் கொண்டே இருக்கின்றது வெறும் காற்றை.

வலிகள் ஆயிரம் இருக்கும் அழத்தான் வார்த்தைகள் இல்லை என் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் மட்டும் வலிக்கின்றது என் வலிகளாக நீ பிரிந்து சென்றதால்.
 
காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!
 
உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்.

இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை
காதலிக்க தேடி வருவேன்.

இதயம் துடிப்பது சாதாரண
விடயமாக இருக்கலாம்
ஆனால் என் இதயம் துடிப்பது
உனக்காக மட்டுமே..!

நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பதல்ல காதல் நீ எப்படி
இருந்தாலும் உன்னை
மட்டும் தான் விரும்புவேன்
என்பதே உண்மை காதல்.

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்.
மீண்டும் ஒரு பிறவி என்று
இருந்தால் அதிலும் நீ தான்
என் காதலாக வேண்டும்.


என் காதலுக்கு உரியவளே
உன் முகத்தை பார்த்தால்
போதும் வலிகளை கூட
சுகமாக உணர்ந்திடுவேன்.
உன் முகம் காண
காத்திருப்பதும்
ஒரு சுகம் தான்.

காதலில் சிறு பிரிவும்
பெரிய சண்டைகளும்
வருவது ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வதற்கே..!
இதை புரிந்து
கொண்டவர்களுக்கு பிரிவு
என்பது இல்லை..!

என் தாயாக உன்னை
நினைக்கிறன் காதலியாக
அல்ல..! என் தாயின்
அன்பும் அரவணைப்பும்
உன்னிடத்தில் கண்டேன்..!

என்னை அறியாமல் உன்
மீது அளவு கடந்த பாசத்தை
வைத்து விட்டேன்..! அதனால்
தான் உன் சிறு மாற்றங்கள்
கூட என்னை அதிகம்
காயப்படுத்துகின்றது..!

தட்டி விடவும் தோளில்
தட்டிக் கொடுக்கவும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் என்னை
கட்டி அணைத்து அன்பு
செலுத்த உள்ள உறவு
நீ மட்டும் தான்.

போதைப் பழக்கம்
இல்லாத நான்
தினம் தினம்
போதையாகிறேன்
உன் விழிகளை
காணும் போது.

காதல் கவிதைகள்
எதற்கு என் காதலே
கவிதையாக அமைந்து
விட்ட பிறகு..!

இரவில் உறக்கம் என்னை
ஆட்சி செய்ய என்
உறக்கத்தை ஆட்சி
செய்கிறது உன் கனவுகள்..!

அழகு எனும் சொல்லிற்கு
உண்மையான அர்த்தத்தை
உணர்த்தியவள் நீ தான்..!
அழகு என்பது உண்மையான
அன்பு என்று எனக்கு புரிய
வைத்தவள் நீ தான்…!

கவிதைகள் போல
இதமான மன
உணர்வைவையும் மன
நிறைவையும் தருபவை
உன் காதல் தான்…!

முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல்
இருந்தாலும் என் அன்பிற்கும்
காதலிற்கும் உரித்தானவள்
நீ ஒருத்தி மட்டும் தான்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்.

துடிக்கும் இதயம் கூட
நின்று போகலாம் ஆனால்
நின்ற இதயம் கூட மீண்டும்
துடிக்கும் உன் அழகான
நினைவுகள் என் இதயத்தில்
பதிந்திருப்பதால்..!


நொடிக்கு நொடி மூச்சுக்
காற்று போல என்
இதயத்தை உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!
 
அவள் கரம் சேர காதலுடன்
காத்திருந்தேன். கரம்
கோர்த்து அழைத்து
வந்தால் அவள்
காதலனை..!

தனிமையும் ஒரு சுகமாக
போய்விட்டது. உன்
நினைவுகளை நினைத்து
பார்க்கையில்..!

உன்னோடு சேர முடியாத
இந்த வாழக்கையை வாழ
முடியாமல் தவிக்கும்
மனதிற்கு எப்படி ஆறுதல்
சொல்லவது என்று
எனக்கு புரியவில்லை.

சுவாசித்த காற்றையும்
நேசித்த காதலையும்
எப்போதும் மறக்க முடியாது.
அப்படி மறந்தால் அது
மரணமாக தான் இருக்கும்…!

உன்னை தொலைத்த என்
இதயம் உன்னை
தொலைத்த இடத்தில்
நிண்டு உன்னை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கின்றது.

நீ தூரத்தில் பிரிந்து இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுடன்
நெருக்கமாக இருந்து
கொண்டிருக்கின்றது..!
உன் நினைவுகளை யாராலும்
என்னிடம் இருந்து
பிரிக்க முடியவில்லை..!


நீ தந்த வலிகளை இனிமையாக்க
உன் நினைவுகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.

மிகப் பெரிய வலி நான்
உன்னுடன் பேச நினைத்தும்
உன்னோடு பேச முடியாமல்
தவிப்பது தான்.

காதலை போல் முகச் சிறந்த
பரிசும் இல்லை..! காதலைப்
போல மிக மோசமான
வலியும் இல்லை..!

எவ்வளவு தான் அழுதாலும்
காதல் ஏற்படுத்திய வலிகள்
குறைவதில்லை..!

நீ தந்த காதல் வலிகளால்
உன் அழகிய நினைவுகள்
கூட கனவில் வரமால்
போய்விட்டது.


என் முழு வாழ்க்கையையும்
உனக்காக வாழ்ந்த எனக்கு..!
நீ தந்த வலிகள் என்னை
வலிகளின் அர்த்தத்தை
உணர்த்திக் கொண்டிருக்கின்றது..!

என் காதலே எனது மறக்க
முடியாத புன்னகையையும்
நீ தான் தந்தாய்..! எனது
மறக்க முடியாத அழுகையும்
நீ தான் கொடுத்தாய்..!

நான் இல்லை என்றால்
உனக்காக பலர்
காத்திருப்பார்கள்..! ஆனால்
எனக்கோ நீ இல்லை என்றால்
எனக்காக காத்திருப்பது என்
மரணம் மட்டும் தான்..!

என்னை மறந்து விடு என்று
சொல்லும் போது வார்த்தையோ
சிறியது தான் ஆனால் அதன்
வலியோ கொடுமையாக
இருக்கும்.

இரக்கமே இல்லாத உன்னை
ஒவ்வொரு நொடியும்
உண்மையாக நேசித்த
பாவத்திற்கு ஒவ்வொரு
நொடியும் வலியுடனே
நகருகின்றது.

இந்த உலகில் யாரும்
யாருக்காகவும் இல்லை
என்ற உண்மை புரிந்து
விட்டால் வாழ்வின் பல
வலிகள் இல்லாமல்
போய் விடும்..!

அன்பு எவ்வளவு அழகானது
என்பதை உன்னிடம் தான்
அறிந்தேன். அதே அன்பு
எவ்வளவு வலிகளை தரும்
என்பதையும் உன்னிடம்
தான் உணர்ந்தேன்.


உயிரிலும் மேலாக ஒருவரை
நேசித்து அந்த உறவால்
புறக்கணிக்கப்பட்டும் போது
இதயத்திற்கு ஏற்படும்
வலியை தீர்க்க முடியாது.

நாம் உயிரிலும் மேலாக
நேசிக்கும் இதயத்திடம்
நம் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
அடையும் போது கோபம்
இருக்காது வலிகள்
தான் இருக்கும்.

நம் உடலுக்கு நம் உயிர் கூட
வலியாக தான் இருக்கும்.
நாம் உயிராக நேசிக்கும்
ஒரு உயிர் நம்மை
மறந்து விட்டால்.

சில நேரம் வலிகளின்
உச்சத்தால் சிலரை
வெறுக்க தோணும்.
ஆனால் எந்த நேரத்திலும்
அவர்களை மறக்க தோணாது..!
 
அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?
 
Athukula Update ahaaaa :Drunk: rombha fast aha irukingaaa bro...

Kavithai Super huuuuu :heart1:
 
Thedi pogathe alatchiyapadutha paduvaai
Ethir paarkathe ematrappaduvai.
Unnai mattum nambu nadipu niraintha ulagam ithu ..!!

-9 Oviyan
 
Top