• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சுகமான நினைவுடன்...

guitar

Newbie
மாலை நேரம்
மேகங்கள் ஒன்று சேர்ந்து
சேர்த்து வைத்த
தண்ணீர் துளிகளால்
மரங்களை குளி பாட்டி கொண்டிருந்த நேரம்....

யாருமற்ற தனிமையில்
அந்த பயனியர் நிழல்குடையின் கீழ்
உனக்கு பிடித்த மழையில்
எனக்கு பிடித்த காகித கப்பலை
தண்ணீரோடு அனுப்பியபடி நான்....

உடலோடு கட்டிய சேலை
சேலையோடு ஒட்டிய மழைத்துளி
தேகத்தை மூடியபடி
கண் மட்டும் தெரிய ஒருத்தி வந்தாள்....

முகம் பார்க்க முடியவில்லை
கண் பார்த்து உணர்ந்தேன்
என்றோ என்னை சிறைபடுத்திய
அதே கண்கள் மீண்டும் என் எதிரே....

காலங்கள் பின்னோக்கி பயணிக்க
இறந்த காலத்தின் நினைவுகள்
உயிரோடு என் நிகழ்காலத்தின் முன்....

எங்கோ மறைந்திருந்த
காதல் நிமிடங்கள்
ஓடிவந்தது கண் முன்....

என் இதயத்தை
இறுக்கி பிடித்து
என் இரவினை
விலைக்கு வாங்கி
உறக்கத்தை
மறக்க செய்த அதே கண்கள்....

என் மனம் தடுமாறுகிறது
உன் மனமும் தடுமாறுகிறதோ.??...
உணர்கிறேன் மழையிலும்
தனியே தெரியும் உன் கண்ணீர் துளிகள்....

நீதான் அவள்
உன் கண்களே காட்டிகொடுத்துவிட்டது....

இந்த தனிமைக்காய்
காத்திருந்த காலமுண்டு
ஆனால் காலம் காத்திருக்கவில்லை....

காதல் வந்தபோது
நீ அருகில் இல்லை
இன்று நீ அருகில் இருக்கிறாய்
நம் காதல் தூரமாய் நின்று
நம்மை வேடிக்கை பார்கிறது....

காரணம் காலம்....

கன்னியாய் பிரிந்தவள்
கழுத்தில் தாலியோடு வந்திருக்கிறாய்....

கலையிழந்த கண்கள்
உனக்கு பிடிக்காத தாடி
மௌனத்தை மட்டுமே பேச தெரிந்த உதடுகள்
கையில் உன்னை சேராத
என் காதல் கவிதைகள்
புரிந்திருக்கும் உனக்கு
உன் நினைவோடுதான் நான் இன்றும் என்று....

பேசாமல் புரிந்துகொண்டோம்
நாம் காதலை-இன்றும்
பேசாமலே புரிகிறது
நம் காதலின் நிலமையை....

மழை நின்று விட்டது
உன் பாதம் நடக்க தொடங்கியது....

மறைத்து வைத்த கண்ணீரை
கன்னங்களுக்கு பரிசளித்தபடி நான்....

மறக்க நினைத்தேன் உன்னை
மறந்து பார்த்துவிட்டேன்
என்னுள் உறங்கிய உன்
நினைவுகள் விழித்தெழுந்து
நனமாட தொடங்கியது....

இதோ என்னுள் மழைகாலம்
அதில் உன் நினைவுகள்
காகித கப்பலாய் பயணித்தபடி.....

நானும் கிளம்பிவிட்டேன்
உன்னிடம் சொல்லாத என் காதலையும்
உன்னை சேராத என்
காதல் கவிதைகளையும் எடுத்து கொண்டு….
 
மாலை நேரம்
மேகங்கள் ஒன்று சேர்ந்து
சேர்த்து வைத்த
தண்ணீர் துளிகளால்
மரங்களை குளி பாட்டி கொண்டிருந்த நேரம்....

யாருமற்ற தனிமையில்
அந்த பயனியர் நிழல்குடையின் கீழ்
உனக்கு பிடித்த மழையில்
எனக்கு பிடித்த காகித கப்பலை
தண்ணீரோடு அனுப்பியபடி நான்....

உடலோடு கட்டிய சேலை
சேலையோடு ஒட்டிய மழைத்துளி
தேகத்தை மூடியபடி
கண் மட்டும் தெரிய ஒருத்தி வந்தாள்....

முகம் பார்க்க முடியவில்லை
கண் பார்த்து உணர்ந்தேன்
என்றோ என்னை சிறைபடுத்திய
அதே கண்கள் மீண்டும் என் எதிரே....

காலங்கள் பின்னோக்கி பயணிக்க
இறந்த காலத்தின் நினைவுகள்
உயிரோடு என் நிகழ்காலத்தின் முன்....

எங்கோ மறைந்திருந்த
காதல் நிமிடங்கள்
ஓடிவந்தது கண் முன்....

என் இதயத்தை
இறுக்கி பிடித்து
என் இரவினை
விலைக்கு வாங்கி
உறக்கத்தை
மறக்க செய்த அதே கண்கள்....

என் மனம் தடுமாறுகிறது
உன் மனமும் தடுமாறுகிறதோ.??...
உணர்கிறேன் மழையிலும்
தனியே தெரியும் உன் கண்ணீர் துளிகள்....

நீதான் அவள்
உன் கண்களே காட்டிகொடுத்துவிட்டது....

இந்த தனிமைக்காய்
காத்திருந்த காலமுண்டு
ஆனால் காலம் காத்திருக்கவில்லை....

காதல் வந்தபோது
நீ அருகில் இல்லை
இன்று நீ அருகில் இருக்கிறாய்
நம் காதல் தூரமாய் நின்று
நம்மை வேடிக்கை பார்கிறது....

காரணம் காலம்....

கன்னியாய் பிரிந்தவள்
கழுத்தில் தாலியோடு வந்திருக்கிறாய்....

கலையிழந்த கண்கள்
உனக்கு பிடிக்காத தாடி
மௌனத்தை மட்டுமே பேச தெரிந்த உதடுகள்
கையில் உன்னை சேராத
என் காதல் கவிதைகள்
புரிந்திருக்கும் உனக்கு
உன் நினைவோடுதான் நான் இன்றும் என்று....

பேசாமல் புரிந்துகொண்டோம்
நாம் காதலை-இன்றும்
பேசாமலே புரிகிறது
நம் காதலின் நிலமையை....

மழை நின்று விட்டது
உன் பாதம் நடக்க தொடங்கியது....

மறைத்து வைத்த கண்ணீரை
கன்னங்களுக்கு பரிசளித்தபடி நான்....

மறக்க நினைத்தேன் உன்னை
மறந்து பார்த்துவிட்டேன்
என்னுள் உறங்கிய உன்
நினைவுகள் விழித்தெழுந்து
நனமாட தொடங்கியது....

இதோ என்னுள் மழைகாலம்
அதில் உன் நினைவுகள்
காகித கப்பலாய் பயணித்தபடி.....

நானும் கிளம்பிவிட்டேன்
உன்னிடம் சொல்லாத என் காதலையும்
உன்னை சேராத என்
காதல் கவிதைகளையும் எடுத்து கொண்டு….
Nice
 
மாலை நேரம்
மேகங்கள் ஒன்று சேர்ந்து
சேர்த்து வைத்த
தண்ணீர் துளிகளால்
மரங்களை குளி பாட்டி கொண்டிருந்த நேரம்....

யாருமற்ற தனிமையில்
அந்த பயனியர் நிழல்குடையின் கீழ்
உனக்கு பிடித்த மழையில்
எனக்கு பிடித்த காகித கப்பலை
தண்ணீரோடு அனுப்பியபடி நான்....

உடலோடு கட்டிய சேலை
சேலையோடு ஒட்டிய மழைத்துளி
தேகத்தை மூடியபடி
கண் மட்டும் தெரிய ஒருத்தி வந்தாள்....

முகம் பார்க்க முடியவில்லை
கண் பார்த்து உணர்ந்தேன்
என்றோ என்னை சிறைபடுத்திய
அதே கண்கள் மீண்டும் என் எதிரே....

காலங்கள் பின்னோக்கி பயணிக்க
இறந்த காலத்தின் நினைவுகள்
உயிரோடு என் நிகழ்காலத்தின் முன்....

எங்கோ மறைந்திருந்த
காதல் நிமிடங்கள்
ஓடிவந்தது கண் முன்....

என் இதயத்தை
இறுக்கி பிடித்து
என் இரவினை
விலைக்கு வாங்கி
உறக்கத்தை
மறக்க செய்த அதே கண்கள்....

என் மனம் தடுமாறுகிறது
உன் மனமும் தடுமாறுகிறதோ.??...
உணர்கிறேன் மழையிலும்
தனியே தெரியும் உன் கண்ணீர் துளிகள்....

நீதான் அவள்
உன் கண்களே காட்டிகொடுத்துவிட்டது....

இந்த தனிமைக்காய்
காத்திருந்த காலமுண்டு
ஆனால் காலம் காத்திருக்கவில்லை....

காதல் வந்தபோது
நீ அருகில் இல்லை
இன்று நீ அருகில் இருக்கிறாய்
நம் காதல் தூரமாய் நின்று
நம்மை வேடிக்கை பார்கிறது....

காரணம் காலம்....

கன்னியாய் பிரிந்தவள்
கழுத்தில் தாலியோடு வந்திருக்கிறாய்....

கலையிழந்த கண்கள்
உனக்கு பிடிக்காத தாடி
மௌனத்தை மட்டுமே பேச தெரிந்த உதடுகள்
கையில் உன்னை சேராத
என் காதல் கவிதைகள்
புரிந்திருக்கும் உனக்கு
உன் நினைவோடுதான் நான் இன்றும் என்று....

பேசாமல் புரிந்துகொண்டோம்
நாம் காதலை-இன்றும்
பேசாமலே புரிகிறது
நம் காதலின் நிலமையை....

மழை நின்று விட்டது
உன் பாதம் நடக்க தொடங்கியது....

மறைத்து வைத்த கண்ணீரை
கன்னங்களுக்கு பரிசளித்தபடி நான்....

மறக்க நினைத்தேன் உன்னை
மறந்து பார்த்துவிட்டேன்
என்னுள் உறங்கிய உன்
நினைவுகள் விழித்தெழுந்து
நனமாட தொடங்கியது....

இதோ என்னுள் மழைகாலம்
அதில் உன் நினைவுகள்
காகித கப்பலாய் பயணித்தபடி.....

நானும் கிளம்பிவிட்டேன்
உன்னிடம் சொல்லாத என் காதலையும்
உன்னை சேராத என்
காதல் கவிதைகளையும் எடுத்து கொண்டு….
Good..
 
Top