guitar
Newbie
இரவில் ஒரு கவிதை
அது நிலவாக இருக்கலாம்
இல்லை நீயாக இருக்கலாம்
இரவோடு பேசும் நிலவு
என் கனவோடு பேசும் நீ
எனக்கு இரண்டுமே தூரமாய்
இரவுக்கு ஒளி
தரும் நிலவு போலத்தான்
உன் நினைவுக்கு
உயிர் கொடுகிறது இந்த இரவு
இரவில் நிலவு
கீழ் இறங்கியது
நீயும் இரங்கி வந்தாய்
கால்கள் துணையோடு
நிலவு சிதறி
விண்மீன்கள் ஆனது
நானும் உதறி எழுந்தேன்
புன்னகையோடு
கையிரண்டை பிடித்தாய்
கன்னத்தில் குழி விழ சிரித்தாய்
கண்களால் புகை படம் எடுத்து
நெஞ்சுக்குழியில் சேமித்தேன்
மயில் தோகை விரிந்தாய்
உன் மடியைதான் சொல்கிறேன்
அள்ளி அணைக்கும் அவசரத்தில்
கில்லி விட்டு பின்
பூக்களால் தடவி கொடுத்தாய்
இப்போது உன் விரல்களைத்தான் சொல்கிறேன்
வரும் வழியில்
மழையில் நனைந்தாயோ
வழக்கத்தைவிட
அதிகமாய் குளிர்கிறாய்
பனி துளிகள்
சுவாசம் முழுவதும்
பூக்களின் கால் தடங்கல்
என் வாசல் முழுவதும்
கையில் சில பூக்கள்
தலை முடியிலும் சில பூக்கள்
பூ வாசனை வீசி வந்தாய்
புரிந்தது எனக்கு
புலர்ந்தது காலை என்று
பேசாத நிலவால்
மௌனம் நிலவும்
பேசிய நீயும்
மௌனத்தை உலவ விடுகிறாய்
கை பிடி நீர் எடுத்து
என் கைகளில் ஊற்றினாய்
உற்று பார்த்தேன் நிலவு மறைந்தது
நிமிர்ந்து பார்த்தேன் நீயும் மறைந்தாய்
புரியாமல் சிரித்தேன்
அவ்வபோது
பிரியும் நேரம்
இப்போது
என் சந்திப்பது
எப்பொழுது
பதில் சொல்லாமல் போனாய்
நிலவை போல்
இருள் சூழ்ந்த பகலனேன்
வழக்கம்போல்
இரவு முடிந்தது
நினைவும் தொடர்ந்து
மீண்டும் ஒரு
நிலா இரவில் புன்னகையோடு நான்...
அது நிலவாக இருக்கலாம்
இல்லை நீயாக இருக்கலாம்
இரவோடு பேசும் நிலவு
என் கனவோடு பேசும் நீ
எனக்கு இரண்டுமே தூரமாய்
இரவுக்கு ஒளி
தரும் நிலவு போலத்தான்
உன் நினைவுக்கு
உயிர் கொடுகிறது இந்த இரவு
இரவில் நிலவு
கீழ் இறங்கியது
நீயும் இரங்கி வந்தாய்
கால்கள் துணையோடு
நிலவு சிதறி
விண்மீன்கள் ஆனது
நானும் உதறி எழுந்தேன்
புன்னகையோடு
கையிரண்டை பிடித்தாய்
கன்னத்தில் குழி விழ சிரித்தாய்
கண்களால் புகை படம் எடுத்து
நெஞ்சுக்குழியில் சேமித்தேன்
மயில் தோகை விரிந்தாய்
உன் மடியைதான் சொல்கிறேன்
அள்ளி அணைக்கும் அவசரத்தில்
கில்லி விட்டு பின்
பூக்களால் தடவி கொடுத்தாய்
இப்போது உன் விரல்களைத்தான் சொல்கிறேன்
வரும் வழியில்
மழையில் நனைந்தாயோ
வழக்கத்தைவிட
அதிகமாய் குளிர்கிறாய்
பனி துளிகள்
சுவாசம் முழுவதும்
பூக்களின் கால் தடங்கல்
என் வாசல் முழுவதும்
கையில் சில பூக்கள்
தலை முடியிலும் சில பூக்கள்
பூ வாசனை வீசி வந்தாய்
புரிந்தது எனக்கு
புலர்ந்தது காலை என்று
பேசாத நிலவால்
மௌனம் நிலவும்
பேசிய நீயும்
மௌனத்தை உலவ விடுகிறாய்
கை பிடி நீர் எடுத்து
என் கைகளில் ஊற்றினாய்
உற்று பார்த்தேன் நிலவு மறைந்தது
நிமிர்ந்து பார்த்தேன் நீயும் மறைந்தாய்
புரியாமல் சிரித்தேன்
அவ்வபோது
பிரியும் நேரம்
இப்போது
என் சந்திப்பது
எப்பொழுது
பதில் சொல்லாமல் போனாய்
நிலவை போல்
இருள் சூழ்ந்த பகலனேன்
வழக்கம்போல்
இரவு முடிந்தது
நினைவும் தொடர்ந்து
மீண்டும் ஒரு
நிலா இரவில் புன்னகையோடு நான்...