• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உன்னை மறக்க முடியவில்லை

SugarLipsS

Epic Legend
Senior's
Chat Pro User
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நீ இருக்கிறாய். நான் முயற்சி செய்தேன், உன்னை மறக்க... ஆனால் என் நினைவுகள் என்னை விட்டு விலகவில்லை. நீ என்னை விட்டு சென்றபோது, காரணம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த கேள்வி இன்னும் என் மனதில் தொங்குகிறது. நான் என்ன தவறு செய்தேன்? நீ ஏன் என்னை விட்டு சென்றாய்?


உன்னோடு இருந்த ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு கனவாக இருந்தது. நீ என்னை அன்பாக பார்த்தபோது, என் உலகம் முழுவதும் நீ மட்டுமே இருந்தாய். ஆனால் இப்போது, நீ இல்லாத இந்த உலகம் எனக்கு வெறும் கறுப்பாக தெரிகிறது. உன் முகம், உன் புன்னகை, உன் சொற்கள்... எல்லாமே என் மனதில் உறைந்து விட்டன. நீ என்னை விட்டு சென்றாலும், என் இதயம் உன்னைத் தேடிக்கொண்டே இருக்கிறது.


எனக்காக நீ திரும்பி வருவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீ உன் வாழ்க்கையை தொடர்ந்தாய். நான் உன்னை மறக்க முயற்சி செய்தேன், ஆனால் என் மனம் உன்னைத் தேடுகிறது. உன்னை மறக்க முடியாது என்று உணர்கிறேன். நீ இப்போது வேறொருவருடன் இருந்தாலும், என் இதயம் உன்னைத் தேடுகிறது.


நீ என்னை விட்டு சென்றாலும், நான் உன்னை நேசிக்கிறேன். இந்த அன்பு என் இதயத்தில் என்றும் இருக்கும். நீ இனி என்னுடன் இல்லாவிட்டாலும், நீ என் நினைவுகளில் என்றும் இருக்கிறாய். நான் உன்னை மறக்க முடியாது... நீ என் இதயத்தில் என்றும் இருக்கிறாய்.
 
உன்னிடம் சண்டைபோட்டு பிரிந்தபிறகு நான் எடுத்த முடிவு இனி உன் நியாபகம் எனக்கு துளி கூட எனக்கு வர கூடாது என்று உறுதியாய் இருந்தேன்

நாட்கள் செல்ல செல்ல யாரை பார்த்தாலும் உன் சாயல் போல எனக்கு தோன்றுகிறதுவேறு ஒருவரின் குறுஞ்செய்தி உன் குறுஞ்செய்தி போல தோன்றுகிறது

இப்போதெல்லாம் உன் நியாபகம்தான் எனக்கு அதிகமாக தோன்றுகிறது எப்படியாவது நீ என்னிடம் பேச மாட்டியானு மனசு முழுவதும் உன் நியாபகம் தான்

மௌனமாய் தான் இருக்கிறேன் உன்னிடம் பேச கூடாது என்று ஆனால் உன் நினைவுகள் என்னை மெளனமாய் இருக்கவிடுவதில்லை

யாரை பிரிந்தபின் உன்னால்
இயல்பாக இருக்க முடியவில்லையோ
புரிந்துகொள் அவர்தான் உன் அன்பிற்கு உரியவர் என்று
( நீதான் அது ) புரிந்துகொள்
 
என்னோடு சிறிது காலம்
நீ இருந்தாய் என்பது
என் வாழ்நாள் முழுவதிற்குமான
மகிழ்ச்சி

என்னோடு நீ இல்லாமல் போய்
விட்டாய் என்பது என்றென்றைக்கும்
ஆன என் ஆறாத்துயரம் இதற்கு
இடையில் இவ்வாழ்வை கடப்பது
பெருங்கொடுமை..
 
அத்தனை வலிகளுக்கு பின்பும்
அவர்களை மறக்க வேண்டும் என நினைக்கும் போது பெரிதாய் தெரியவில்லை....

மகிழ்வான நினைவுகள் எதுவுமில்லையே இலகுவில் மறந்திடலாம் என நினைத்துக் கொண்டது என் தவறு தான்....

மறக்க ஆரம்பிக்கும் போதுதானே
தெரிகிறது எம் தேவையே
அவர்கள்தான் என....

பின் என்னால் எப்படி அவர்களை மறந்து கொள்ள முடியும்....

வார்த்தைகளால் சொல்லிக்
கடப்பதற்கு அனைத்தும்
சிறியதாய்த்தான் தெரிகிறது
அனுபவித்துச் செல்வதற்குத்தான்
இங்கு அனைத்துமே கடினம்....

மறக்க நினைத்தும்
முடியாமல் நான்....
மீண்டுமே அவர்களிடம்
தொலைந்து போகின்றேன்....
 
நீயும் நானும் சந்திக்க முடியாத தூரத்தில்
இருந்தாலும்.................

பேச முடியாத சூழ்நிலையில்
இருந்தாலும்.................

என் மனம்
நினைப்பது உன்னை
மட்டுமே...............
 
Top